Sunday, December 21, 2008

மறைந்துப் போகலாம்.....

The Day the Earth Stood Still சமீபத்தில் வெளி வந்திருக்கும் ஆங்கில திரைப்படம். கதை இதுதான் – மனிதன் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பூமியை தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு அழித்தும், உருமாற்றியும் வருகிறான். இதே பூமியில் வாழும் மற்ற உயிரினங்களைப் பற்றி அக்கறை படுவதாய் இல்லை. வெகு தொலைவில் வாழும் வேறு உயிரினம் அதனை ஒழுங்குப்படுத்த வருகிறது (எங்கு எது நடந்தாலும் தன் மூக்கை நுழைக்கும் அமெரிக்காவைப் போல). மனிதனை தவிர மற்ற உயிரினங்களில் சாம்பிள் எடுத்து பத்திரபடுததவும் செய்கிறது.

மனிதனை அழிக்க ஒரே ஒரு உயிர் தான் வருகிறது. அதன் பலம் அறியாமல் வழக்கம் போல நம் அமெரிக்கா தன் இரானுவ பலத்தை காட்டுகிறது. ஆனால் அதனிடம் அன்பு காட்டி அதன் நோக்கத்தை புரிந்து கொள்ளும் பெண் ஆராய்ச்சியாளர், மனித இனத்தை அழிக்க வேண்டாம் என்றும் மனிதன் தன்னை திருத்திக் கொள்வான் என்றும் புரிய வைக்கிறார். மனிதனை நம்பும் அந்த (முட்டாள்!!!) வேற்று கிரக உயிரினமும் மனிதனை அழிக்காமல் சென்று விடுகிறது.

(நான் படத்தினை விமர்சிக்க முயலவில்லை. மாறாக அதன் கருத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.)

படத்தை பார்க்கும் பொழுதே யோசித்துப் பார்த்தேன்.

மற்ற உரினங்களுக்கு சிந்திக்கும் அறிவு இல்லாததால் தானே நாம் அதனை அடிமைகளாக்கி ஆட்சி செய்கிறோம். ஒரு வேளை பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் அவை அனைத்தும் சிந்திக்கும் திறன் பெற்று நாம் அவைகளுக்கு செய்யும் கொடுமையை உணர்ந்துக் கொண்டால்!!??

நாம் அவ்வுயிரினங்களுக்கு எதிரிகள் என்றும் நாம் வாழ அவைகளை அழித்தும், பயன்படுத்தியும் வருகிறோம் என்று எண்ணத் தொடங்கி நம்மை அழிக்க அவைகள் புறப்பட்டால், என் ஒருவனை அழிக்க மட்டும் பல லட்சம் உயிர்கள் ரவுண்டு கட்டி நிற்கும். நினைத்துப் பார்க்கலாம் என்றால் அந்நினைப்பை முடிக்கும் முன்பே நான் இருந்த தடயம் இல்லாமல் ஆகி விடுவேன் போலும்….

 

இப்பூமியில் நம்மை விட ஆற்றல் மிகுந்த உயிரினங்கள் பல உள்ளன. அவர்கள் நம்மை ஆள வெகு காலம் ஆகாது. இப்பூமி நமக்கு மட்டும் சொந்தம் இல்லை. நமக்கு முன்பும், இப்பொழுதும், எதிர்காலத்தில் ஜனிக்கப்போகும் பல கோடானு கோடி உயிர்களுக்கும் சொந்தம்.

யாரும் யாரையும் அழிக்கும் முன்பு உணர்ந்து செயல்படுதல் நலம்…. இல்லையேல் சிந்திக்க கூட நேரம் இன்றி மறைந்துப் போகலாம்.

 

 

1 comment:

அக்னி பார்வை said...

அருமை...உஙளை நான் எந்த திரட்டியிலும் பார்பதில்லை..அதில் சேர..

1.http://www.tamilmanam.net/
2.http://www.tamilish.com
இவை முக்கியமானது ..இன்னும் உள்ளது