ஆட்டோவில் இருந்து இறங்கி meterஅ பார்த்து விட்டு, பழக்க தோசத்தில் ஒட்டுனரை பார்த்து எவ்வளவு என்றேன். அவர் மீட்டரை பார்த்து விட்டு ரூ.9 என்றார்(அவர் மொழியில்). என் இதயமே ஒரு நொடி நின்று இயங்கியது. என் சிறு வயது முதல் இன்று வரையில் பத்து ரூபாய்க்கும் குறைவாக பயனம் செய்த வரலாறு இல்லை.
பத்து ரூபாய் தாள் ஒன்றை எடுத்து கொடுத்து விட்டு நடக்கலானேன். அந்த ஓட்டுநர் என்னை அழைத்து ஒரு ரூபாய் நாணயத்தை திருப்பி கொடுத்து விட்டு சென்று விட்டார். நான் உன்மையிலேயே பிரம்மையில் ஆழ்ந்தேன்.
இவை அனனத்தும் பால் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் நடமாடும் ’புந்நிய’ பூமியில் நிகழ்ந்த அதிசயம். நான் வாழும் நாட்டின் ஒரு பகுதியில் இப்படியும் மக்களா? இப்படியும் ஒரு வழக்கமா?
குறிப்பு: நான் முதல் முறையாக(22/11/08) மும்பை சென்ற பொழுது நடந்தவை இவை.
Wednesday, December 3, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அதன் அங்கு குண்டு வெடிக்குது...
’புந்நிய’ --> புண்ணிய பூமி?
பயனம் --> பயணம்
பிரம்மையில் --> பிரமிப்பில்
உன்மையிலேயே --> உண்மையிலேயே
நன்றி Joe.. பல காலத்திற்கு பிறகு செந்தமிழில் எழுத முனைவதால் சிறு பிழை நேர்ந்து விட்டது. எனினும் தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி.
Post a Comment